Skip to main content

padmavathi travels

தமிழகத்தில் கால் பதித்த திருப்பதி ஏழுமலையான்!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவம், புஷ்கரணி தீர்த்தவாரி உள்ளிட்ட விழாக்கள் நடக்கும் அதேநாளில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா சாமி கோவிலிலும் அவ்விழாக்கள் நடக்கும்.

தமிழகத்தில் கால் பதித்த திருப்பதி ஏழுமலையான்! கும்பாபிஷேகத்தின்போது...
 
திருப்பதி ஏழுமலையான் கோவிலின் மாதிரி தமிழகத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் அமைக்கப்பட்டுள்ளது. இன்று நடந்த இக்கோவிலின் கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 2010-ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி ஸ்ரீநிவாச திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது

திருக்கல்யாணத்தைத் தொடர்ந்து விவேகானந்த கேந்திர வளாகத்தில் தேவஸ்தானம் சார்பில் சுமார் 22 கோடி ரூபாய் செலவில் ஏழுமலையானுக்கு  கோவில் கட்ட முடிவு செய்யப்பட்டது. கோவிலைக் கட்ட விவேகானந்த கேந்திர நிர்வாகம் ஐந்தரை ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்கியது. 2013-ம் ஆண்டு ஜூலை மாதம் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. வெங்கடேஸ்வரா சாமி கோவில் கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து இன்று (27/1/2019) காலை கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலை முன்மாதிரியாகக் கொண்டே ஸ்ரீ வெங்கடேஸ்வரா சாமி கோவிலும் கட்டப்பட்டுள்ளது. வெங்கடேஸ்வரர் சன்னதி, பத்மாவதி சன்னதி, ஆண்டாள் சன்னதி, கருட பகவான் சன்னதி ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளன. சன்னதியில் உள்ள சிலைகள் அனைத்தும் திருமலை திருப்பதியில் உள்ள தேவஸ்தான சிற்பக்கலை கல்லூரியில் வடிவமைக்கப்பட்டவையாகும்.

கோவில் மூலஸ்தான சிலையின் பாதத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 14-ம் தேதி சித்திரை விஷூவை முன்னிட்டு சூரிய ஒளி விழும் வகையில் கோவில் கருவறை அமைக்கப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவம், புஷ்கரணி தீர்த்தவாரி உள்ளிட்ட விழாக்கள் நடக்கும் அதேநாளில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சாமி கோவிலிலும் அவ்விழாக்கள் நடக்கும்.
இந்தக் கோவிலில் அர்ச்சகர்கள் தங்கும் வீடுகள், முடி காணிக்கை செலுத்தும் இடம், அன்னதான மண்டபம் உள்ளிட்டவையும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு, தேவஸ்தானத்தில் இருந்து இங்கு கொண்டு வரப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படவுள்ளது.


Our services 

Comments

Post a Comment